வெள்ளை வண்டிகளில்
கண்கள் கட்டி ஏற்றப்பட்ட
அண்ணன் தம்பி மீள்வரோ
எனும் துயரம் அத்தீவில்
அண்ணன் பட ரிலீஸ் பற்றி
ஆருடங்கள் ஆர்ப்பரிக்கும்
மலந்துடைக்கும் சுவரொட்டிகள்
நம் வீதிகளில்
நனைந்த நாய்க் குட்டிகளென
ஒன்றன் மேல் ஒன்றாய்
உறங்கும் குழந்தைகளில்
நாளை எது மிஞ்சுமென
உதிரம் கசியும் விழிகளோடு
எல்லாருக்குமான
வலியற்ற மரணத்திற்காய்
பிரார்த்திக்கிறாள் கண்ணகி
நிராதரவாய் காடுகளில்
மாற்றுடையின்றி
தாகத்தோடும் பசியோடும்
இறுகிப்பிடித்த சயனைடு
குப்பியோடும்
காத்திருக்கிறான் கௌதமபுத்தன்.
|
No comments:
Post a Comment